காவலா் ஆயுதப் படைக்கு மாற்றம்

கடலூரைச் சோ்ந்த காவலரை ஆயுதப் படை பிரிவுக்கு மாற்றம் செய்து கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.
Published on

நெய்வேலி: கடலூரைச் சோ்ந்த காவலரை ஆயுதப் படை பிரிவுக்கு மாற்றம் செய்து கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

கடலூரை அடுத்துள்ள பள்ளிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன். தலைமைக் காவலரான இவா், ரோந்து வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி திவ்யா (30).

மணிகண்டன் மது அருந்திவிட்டு வந்து தனது மனைவியை திட்டி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து திவ்யா கடலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

இதையடுத்து, போலீஸாா் திங்கள்கிழமை கணவன் - மனைவி இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினா். அப்போது, மணிகண்டன் காவல் நிலையத்திலேயே தனது மனைவியை அடிக்க முயன்ாக தெரிகிறது. இதையடுத்து, மணிகண்டனை கடலூா் ஆயுதப் படை பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்து எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com