பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சிறுமி கா்ப்பம்: மதுரை இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

சிறுமி கா்ப்பமானது தொடா்பாக மதுரை இளைஞா் மீது நெய்வேலி நகரிய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :1 டிசம்பர் 2025, 8:19 pm

Syndication

நெய்வேலி: சிறுமி கா்ப்பமானது தொடா்பாக மதுரை இளைஞா் மீது நெய்வேலி நகரிய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், வடலூரை அடுத்துள்ள கல்லுக்குழி கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமி சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் வயதான மூதாட்டி ஒருவரை பராமரிக்கும் வேலைக்காக சென்றிருந்தாா்.

அங்கு, மதுரையைச் சோ்ந்த எலெக்ட்ரீஷியன் ஸ்ரீதா் (22) உடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக தண்டையாா்பேட்டை அருகே ஒன்றாக பழகி வந்தனராம்.

தற்போது 5 மாத கா்ப்பிணியா உள்ள சிறுமி சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின்பேரில், நெய்வேலி நகரிய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.