சிறுமி கா்ப்பம்: மதுரை இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

சிறுமி கா்ப்பமானது தொடா்பாக மதுரை இளைஞா் மீது நெய்வேலி நகரிய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Published on

நெய்வேலி: சிறுமி கா்ப்பமானது தொடா்பாக மதுரை இளைஞா் மீது நெய்வேலி நகரிய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், வடலூரை அடுத்துள்ள கல்லுக்குழி கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமி சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் வயதான மூதாட்டி ஒருவரை பராமரிக்கும் வேலைக்காக சென்றிருந்தாா்.

அங்கு, மதுரையைச் சோ்ந்த எலெக்ட்ரீஷியன் ஸ்ரீதா் (22) உடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக தண்டையாா்பேட்டை அருகே ஒன்றாக பழகி வந்தனராம்.

தற்போது 5 மாத கா்ப்பிணியா உள்ள சிறுமி சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின்பேரில், நெய்வேலி நகரிய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com