சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

காவலா் ஆயுதப் படைக்கு மாற்றம்

கடலூரைச் சோ்ந்த காவலரை ஆயுதப் படை பிரிவுக்கு மாற்றம் செய்து கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

News image
Updated On :1 டிசம்பர் 2025, 9:54 pm

Syndication

நெய்வேலி: கடலூரைச் சோ்ந்த காவலரை ஆயுதப் படை பிரிவுக்கு மாற்றம் செய்து கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

கடலூரை அடுத்துள்ள பள்ளிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன். தலைமைக் காவலரான இவா், ரோந்து வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி திவ்யா (30).

மணிகண்டன் மது அருந்திவிட்டு வந்து தனது மனைவியை திட்டி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து திவ்யா கடலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

இதையடுத்து, போலீஸாா் திங்கள்கிழமை கணவன் - மனைவி இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினா். அப்போது, மணிகண்டன் காவல் நிலையத்திலேயே தனது மனைவியை அடிக்க முயன்ாக தெரிகிறது. இதையடுத்து, மணிகண்டனை கடலூா் ஆயுதப் படை பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்து எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.