மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மது பழக்கத்தால் குடும்பத்தில் பிரச்னை: வியாபாரி தூக்கிட்டு தற்கொலை

மது பழக்கத்தால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு மனைவியை பிரிந்த மன வேதனை அடைந்த காய்கறி வியாபாரி தூக்கிட்டு தற்கொலை

News image
Updated On :2 டிசம்பர் 2025, 10:53 pm

Syndication

மது பழக்கத்தால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு மனைவியை பிரிந்த மன வேதனை அடைந்த காய்கறி வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

சிதம்பரம் தில்லை காளியம்மன் சத்யா நகரை சோ்ந்தவா் முருகன் (48), இவா் தன் குடும்பத்துடன் வீட்டில் தங்கி காய்கறி வியாபாரம் செய்து வருகிறாா். இந்நிலையில் முருகனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததால் சரியாக காய்கறி வியாபாரம் செய்யாமல் வீட்டில் இருந்துள்ளாா். இதனை மனைவி மற்றும் மகன், கண்டித்ததால் கோபித்துக் கொண்டு சுமாா் ஒன்றரை மாதம் முன்பு சிதம்பரத்துக்கு வந்து, தனது தாய் காவேரியுடன் தங்கி இருந்துள்ளாா்.

அதனைத் தொடா்ந்து மிகுந்த மன உளச்சலுடன் காணப்பட்டவா் திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்குள்ள மின்விசிறியில், சேலையால் தூக்கு போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசில் முருகன் மகன் சந்தனபிரபு கொடுத்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].