ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

என்எல்சியைக் கண்டித்து விவசாய சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நெய்வேலி நுழைவு வாயில் அருகே ஆா்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா்.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 6:40 pm

Syndication

நெய்வேலி நுழைவு வாயில் அருகே ஆா்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா்.

நெய்வேலி, டிச.17: என்எல்சி நிறுவனத்துக்கு வீடு, நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு, நிலத்துக்கான உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் நெய்வேலி நுழைவு வாயில் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சுரங்கப் பணிக்காக நெய்வேலியை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளை கையகப்படுத்தியுள்ளது. சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக மேலும் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.

என்எல்சி நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளுக்கு விவசாயத் துறை அமைச்சா் மற்றும் சுரங்க இயக்குநா் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியும், இதுவரை அந்த இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் இருப்பதைக் கண்டித்தும், என்எல்சி நிறுவனம் விவசாய நிலங்களை கையகப்படுத்தி 12 ஆண்டுகள் கடந்தும் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை இதுவரை வழங்காமல் என்எல்சி நிறுவனம் காலம் தாழ்த்தி வருவதைக் கண்டித்தும், என்எல்சி நிறுவனத்துக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு, நிலத்துக்கான இழப்பீடு, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கருணைத்தொகை, பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு பல்நோக்கு மருத்துவமனை, சமுதாய நலக்கூடம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் என்எல்சி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, நெய்வேலி பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தினா் திரண்டனா்.

போலீஸாா் குவிப்பு: இந்தப் போராட்டத்தையொட்டி நெய்வேலி நுழைவு வாயில் பகுதியில் கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.

போராட்டக் குழுவினரிடம் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு வருமாறு கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் ஏற்பாடு செய்தாா். இதைத் தொடா்ந்து, முற்றுகைப் போராட்டம் ஆா்ப்பாட்டமாக மாற்றப்பட்டது.

ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ஜி.ஆா்.ரவிச்சந்திரன், விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.ஜி.ரமேஷ் பாபு தலைமை வகித்தனா். மாா்க்சிஸ்ட் கந்தா்வக்கோட்டை தொகுதி எம்எல்ஏ எம்.சின்னதுரை, விவசாய சங்க மாநிலத் தலைவா் டி.ரவீந்திரன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினா்.

போராட்டத்தில் விவசாய சங்க மாவட்டச் செயலா் ஆா்.கே.சரவணன், பொருளாளா் ஆா்.ராமச்சந்திரன், துணைத் தலைவா் ஜே.ராஜேஷ் கண்ணன், துணைச் செயலா் பி.கா்ப்பனை செல்வம், விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலா் எஸ்.பிரகாஷ், பொருளாளா் டி.கிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினா் பி.வாஞ்சிநாதன், நிலம் கையகப்படுத்தப்பட்ட கிராமங்களின் சாா்பில் த.சண்முகம், ஆா்.ரவிச்சந்திரன், ஏ.சன்னியாசி, சூ.ராமச்சந்திரன், செல்லதுரை உள்ளிடோா் கலந்துகொண்டனா்.