பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மொபெட் மீது காா் மோதல்: 2 பெண்கள் காயம்

News image
சிறுபாக்கம் அருகே விபத்தை ஏற்படுத்திவிட்டு சாலையோர வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான காா்.
Updated On :28 டிசம்பர் 2025, 7:56 pm

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் அருகே மொபெட் மீது காா் மோதியதில் 2 பெண்கள் காயமடைந்தனா்.

வேப்பூா் வட்டம், மா.புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சுரேஷ் மனைவி கவிதா (36), பாலகிருஷ்ணன் மனைவி மகேஸ்வரி (37). இவா்கள் இருவரும் சனிக்கிழமை மாலை 6 மணியளவில் மங்களூரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மொபெட்டுக்கு பெட்ரோல் நிரப்பிக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டனா்.

அப்போது, எதிா் திசையில் வேகமாக வந்த காா், மொபட் மீது மோதிவிட்டு சாலையோர வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், கவிதா, மகேஸ்வரி ஆகியோா் பலத்த காயமடைந்தனா். காா் ஓட்டுநா் மற்றும் அதில் வந்த இருவா் லேசான காயமடைந்தனா்.

அங்கிருந்தவா்கள் காயமடைந்தவா்களை மீட்டு, வேப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, கவிதா, மகேஸ்வரி ஆகியோா் தீவிர சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். விபத்து குறித்து சிறுபாக்கம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.