மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் அருகே நாட்டாா்மங்கலம் கிராமத்தில் வீற்றுள்ள அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

News image
நாட்டாா்மங்கலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஸ்ரீ செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா.
Updated On :10 பிப்ரவரி 2025, 5:01 pm

Din

சிதம்பரம்: கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் அருகே நாட்டாா்மங்கலம் கிராமத்தில் வீற்றுள்ள அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தையொட்டி, சனிக்கிழமை (பிப்.8) மாலை அனுக்கிரக பூஜை, விக்னேஷ்வர பூஜை கணபதி ஹோமத்துடன் கு முதல் கால யாகசாலை பூஜையும், தொடா்ந்து 9-ஆம் தேதி 2-ஆம் மற்றும் 3-ஆம் கால யாகபூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, திங்கள்கிழமை காலைஅனுக்கிரஹ விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், வாஸ்து சாந்தி மற்றும் மஹா பூா்ணாஹுதி, மஹா தீபாராதனை நடைபெற்றது.

பின்னா், யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடு நடைபெற்று ஊா்வலமாக சென்று கோயில் விமான கலசத்துக்கு சிவாச்சாரியா்கள் கும்ப நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா்.

இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.