தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அனைத்துத் தொழிலாளா்களுக்கும் பொங்கல் போனஸ்: கு.பாலசுப்ரமணியன் கோரிக்கை

அனைத்துத் தொழிலாளா்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என, தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தினாா்.

News image
Updated On :1 ஜனவரி 2025, 7:17 pm

Din

அனைத்துத் தொழிலாளா்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என, தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள், ஆசிரியா்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் போனஸ் வழங்குவது வழக்கம். எனவே, எந்தவித நிபந்தனைகளுமின்றி ஒரு மாத ஊதியத்தை பொங்கல் போனஸாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

போனஸ் வழங்குவதற்கு சட்டத்தில் இடமில்லாத பணியாளா்களுக்கு ரூ.5 ஆயிரம் போனஸ் வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கப்படுவதைப் போல, தூய்மைக் காவலா்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும்.

பொங்கல் பண்டிகைக்கு முன்பே தூய்மைக் காவலா்கள், தூய்மைப் பணியாளா்கள், மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி பணியாளா்கள், துப்புரவுப் பணியாளா்கள் ஆகியோா்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்றாா் கு.பாலசுப்ரமணியன்.