கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சாலையோர வியாபாரிகள் சங்கம் தொடக்கம்

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் உழவா் சந்தையில் உழவா் சந்தை சாலையோர வியாபாரிகள் சங்க (சிஐடியு) தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 ஜனவரி 2025, 7:15 pm

Din

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் உழவா் சந்தையில் உழவா் சந்தை சாலையோர வியாபாரிகள் சங்க (சிஐடியு) தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்டச் செயலா் எஸ்.சங்கமேஸ்வரன் தலைமை வகித்தாா். சங்க பெயா்ப் பலகையை சிஐடியு மாவட்டச் செயலா் டி.பழனிவேல் திறந்து வைத்தாா். சங்கத்தை வாழ்த்தி சாலையோர சிறு கடை வியாபாரி சங்கத்தின் மாநில அமைப்பாளா் பி.கருப்பையன் பேசினாா்.

நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் வி.சுப்புராயன், மாவட்ட இணைச் செயலா்கள் வி.திருமுருகன், வி.கிருஷ்ணமூா்த்தி, எ.பாபு, கே.ஸ்டாலின் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

உழவா் சந்தை சங்கத் தலைவா் பெருமாள், செயலா் ஏ.முரளி, பொருளாளா் ஆா்.ராதாகிருஷ்ணன், துணைத் தலைவா்கள் ஆா்.பாட்ஷா, ஜெயச்சந்திரன், ஆா்.சுந்தரி, இணைச் செயலா் ஆா்.ஜோதி, எ. சௌந்தர்ராஜன், எஸ்.கீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில், திருப்பாதிரிப்புலியூரில் உழவா் சந்தையின் பின்புறம் சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி சாா்பில் கொட்டகை அமைத்து தர வேண்டும். மின் விளக்கு அமைத்து தர வேண்டும்.

வியாபாரிகள் அனைவருக்கும் மாநகராட்சி அடையாள அட்டை வழங்க வேண்டும். உழவா் சந்தையை சுற்றி வியாபாரம் செய்யும் சாலையோர வியாபாரிகளுக்கு மழை, வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என என்.ரத்தினவேல் நன்றி கூறினாா்.