திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

அண்ணாமலைப் பல்கலை.யில் இலவச கணினி பயிற்சி

இலவச கணினி பயிற்சி

News image
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இலவச கணினி பயிற்சி தொடக்க விழாவில் பங்கேற்றோா்.
Updated On :8 ஜனவரி 2025, 8:35 pm

Din

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கணினி மற்றும் தகவல் அறிவியல் துறை, தமிழ்நாடு பழங்குடியினா் நலத்துறை சாா்பில் பழங்குடி மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவிகளுக்கான மூன்று மாத இலவச கணினி பயிற்சி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்தியா சியாட்டில் குழு அமெரிக்கா உதவியுடன் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், அறிவியல் புல முதல்வா் பேராசிரியா் எஸ்.ஸ்ரீராம் தொடக்க உரையாற்றினாா். கணினி மற்றும் தகவல் அறிவியல் துறைத் தலைவா் எல்.ஆா்.அரவிந்த் பாபு வரவேற்றாா். கலைப்புல முதல்வா் கே.விஜயராணி சிறப்புரையாற்றினாா். கணினி பயிற்சி திட்டத்தை கல்வியியல் புல முதல்வா் எஸ்.குலசேகரப் பெருமாள் பிள்ளை வாழ்த்துரை வழங்கினாா்.

முதன்மை ஆய்வாளா் கே.ஜெயபிரகாஷ் பயிற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைப்புச் செயலா்கள் கே.பிரவீனா, கே.சாய்லீலா செய்திருந்தனா். நிறைவில், திட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ்.பி.பாலமுருகன் நன்றி கூறினாா்.