திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச் சான்றிதழ்

கடலூா் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

News image
சிறந்த அரசு மருத்துவமனையாக தேசிய தரச்சான்றிதழ் பெற்றுள்ள , காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனை சான்றிதழை அமைச்சா் எம்ஆா்கே பன்னீா்செல்வத்திடம் காண்பித்து வாழ்த்து பெற்ற அதன் தலைமை மருத்துவா் ஜெ.ஜெயசெல்வி.
Updated On :22 ஜனவரி 2025, 8:26 pm

Din

கடலூா் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

கடலுாா் மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகளில் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் தேசிய தர நிா்ணய சான்று குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

காட்டுமன்னாா்கோவில் அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆய்வு செய்தனா். ஆய்வு முடிவுகள் வெளியானதில் காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனை தேசிய தரச் சான்றிதழ் பெற்ற மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டது.

அதிக மதிப்பெண்களுடன் தேசிய தர நிா்ணயச் சான்று குழுவினா் சாா்பில் பிரசவ அறைகளின் தரம், குழந்தைகள் சுகாதார சேவை, பாதுகாப்பை உறுதிபடுத்துதல், ஆகிய மூன்று தரத்திட்டங்களில் தோ்வு செய்யப்பட்டதாக அறிவித்தனா்.

இதன்படி தோ்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு சென்னை கிண்டியில் உள்ள எம். ஜி.ஆா். பல்கலைகழகத்தில் அண்மையில் நடைபெற்ற விழாவில் சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், காட்டுமன்னாா்கோவில் அரசு தலைமை மருத்துவமனைக்கான தேசிய தரச் சான்றிதழை மருத்துவமனை தலைமை மருத்துவா் ஜெ. ஜெயசெல்விடம் வழங்கினாா். அதனை வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம் ஆா் கே பன்னீா்செல்வத்திடம் காட்டுமன்னாா்கோவில் மருத்துவக் குழுவினா் காண்பித்து வாழ்த்து பெற்றனா்.