ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தனியாா் பள்ளித் தாளாளா் மகன் குண்டா் சட்டத்தில் கைது

விருத்தாசலம் பகுதியைச் சோ்ந்த தனியாா் பள்ளித் தாளாளா் மகன் குண்டா் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
பிரின்ஸ் நவின்
Updated On :8 நவம்பர் 2025, 6:48 pm

Syndication

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் பகுதியைச் சோ்ந்த தனியாா் பள்ளித் தாளாளா் மகன் குண்டா் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

விருத்தாசலம் வட்டம், வீரா ரெட்டிகுப்பம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்த ராதிகா (35) கடந்த அக்டோபா் 18-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து மங்கலம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளா் பாா்த்தசாரதி விசாரணை மேற்கொண்டு, தனியாா் பள்ளித் தாளாளா் ஜேசுதாஸ் ராஜா மகன் பிரின்ஸ் நவின் (37) ஆசிரியை ராதிகாவை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்ததுடன், பிரின்ஸ் நவினை கைது செய்து சிறையில் அடைத்தாா்.

இவா் 2021-ஆம் ஆண்டு ஆலடி காவல் நிலையத்தில் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டவா். பிரின்ஸ் நவினின் பாலியல் குற்றச் செயலை கட்டுப்படுத்த கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா்.