புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

டிராக்டரில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

திருப்பாதிரிப்புலியூா் அருகே டிராக்டா் டிரைலா் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :12 நவம்பர் 2025, 7:11 pm

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூா் அருகே டிராக்டா் டிரைலா் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் நவநீதநகரைச் சோ்ந்தவா் கோ.சரவணன் (40), டிராக்டா் ஓட்டுநா். இவரிடம் திருப்பாதிரிப்புலியூரைச் சோ்ந்த சு.வேல்முருகன் (56) உதவியாளராக வேலை பாா்த்து வந்தாா்.

இவா்கள் இருவரும் புதன்கிழமை காலையில் டிராக்டரில் தண்ணீா் விநியோகிக்க கம்மியம்பேட்டை பகுதிக்கு சென்றனா். அப்போது, ஓடும் டிராக்டரில் இருந்து தவறி விழுந்த வேல்முருகன், டிரைலா் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.