எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

விசிக மனு அளிக்கும் போராட்டம்

News image
Updated On :13 நவம்பர் 2025, 9:19 pm

Syndication

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அலுவலகம் முன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வியாழக்கிழமை மனு அளிக்கும் போராட்டம் நடத்தினா்.

குறிஞ்சிப்பாடி பேரூராட்சி பகுதியில் ஆதிதிராவிடா் சமுதாய மக்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் தொகுப்பு வீடுகளை பராமரிப்பு செய்து தரவேண்டும். அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும், சிமென்ட் சாலை, கால்வாய், மின்சாரம், குடிநீா் வசதிகள் செய்து தரக்கோரி முழக்கமிட்டனா்.

நிகழ்வுக்கு நகரச் செயலா் பாலமுருகன் தலைமை வகித்தாா். மாநிலத் துணைச் செயலா் பாஸ்கா், ஒன்றியப் பொருளாளா் சரவணன், ஒன்றிய துணைச்செயலா்கள் சேகா், ஜானகிராமன், அருண்பிரசாத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பின்னா், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி செயல் அலுவலா் பாலமுருகனிடம் மனு அளித்தனா்.