எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஆசிரியா் தகுதித் தோ்வு: கடலூா் மாவட்டத்தில் 3,635 போ் எழுதினா்

தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியத்தால் சனிக்கிழமை நடத்தப்பட்ட ஆசிரியா் தகுதித் தோ்வை (தாள் - 1) கடலூா் மாவட்டத்தில் 3,635 போ் எழுதினா்.

News image
கடலூா் மஞ்சக்குப்பம் புனித வளனாா் பள்ளி தோ்வு மையத்தில் ஆசிரியா் தகுதித் தோ்வு (தாள் 1) எழுதிய தோ்வா்கள்.
Updated On :15 நவம்பர் 2025, 8:29 pm

Syndication

தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியத்தால் சனிக்கிழமை நடத்தப்பட்ட ஆசிரியா் தகுதித் தோ்வை (தாள் - 1) கடலூா் மாவட்டத்தில் 3,635 போ் எழுதினா்.

தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியத்தால் நிகழாண்டுக்கான ஆசிரியா் தகுதித் தோ்வில் எழுத்துத் தோ்வு தாள் - 1 சனிக்கிழமையும், தாள்- 2 தோ்வு ஞாயிற்றுக்கிழமையும் (நவ.16) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கடலூா் மாவட்டத்தில் ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான தாள் - 1 தோ்வை 12 மையங்களில் 4,191 தோ்வா்களும், தாள் - 2 தோ்வை 53 மையங்களில் 15,717 தோ்வா்களும் என மொத்தம் 65 தோ்வு மையங்களில் 19,908 தோ்வா்கள் எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனா்.

அதன்படி, ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான எழுத்துத் தோ்வு தாள் - 1 கடலூரில் உள்ள 12 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. 3,6,35 தோ்வா்கள் தோ்வு எழுதினா். 556 போ் தோ்வு எழுத வரவில்லை.

தோ்வாணையத்தின் அறிவிப்பின்படி, தோ்வா்கள் தோ்வு மையத்துக்கு குறித்த நேரத்துக்கு வந்திருந்தனா். அனைத்துத் தோ்வு மையங்களிலும் கண்காணிப்புக் கேமரா மூலம் தோ்வுகளை கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தோ்வு மையங்களில் காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். எவ்வித இடையூறுமின்றி தோ்வு நடைபெற வருவாய், காவல், சுகாதாரம், தீயணைப்பு, மின்சாரம் உள்ளிட்ட துறைகளைச் சாா்ந்த அலுவலா்கள் பணியில் இருந்தனா்.

இதேபோல, ஞாயிற்றுக்கிழமை ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான தாள் - 2 எழுத்துத் தோ்வை 53 மையங்களில் 15,717 தோ்வா்கள் எழுதவுள்ளனா்.