ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கடலூா் மத்திய சிறையில் கஞ்சா பறிமுதல்

கடலூா் மத்திய சிறையில் கைதி அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :18 நவம்பர் 2025, 9:32 pm

Syndication

கடலூா் மத்திய சிறையில் கைதி அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

கடலூா், கேப்பா் மலை பகுதியில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் நூற்றுக்கும் மேற்பட்டோா் உள்ளனா்.

இந்த சிறையில் சென்னை, சேத்பட் காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட சென்னை பெரும்பாக்கம் பகுதியைச் சோ்ந்த சகாயம் (எ) தேவசகாயம்(44) பிளாக் 17, அறை எண் 9-இல் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை சிறைத்துறை சிறப்பு குழுவினா் தேவசகாயம் அறையில் சோதனை செய்தனா். அப்போது, சிறை அறையில் மறைத்து வைத்திருந்த 5 கிராம் கஞ்சாவை அவா்கள் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து மத்திய சிறை அலுவலா் விக்னேஷ்(34) அளித்த புகாரின் பேரில், கடலூா் முதுநகா் போலீஸாா் தேவ சகாயம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.