யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

இரண்டாவது மனைவிக்கு கொலை மிரட்டல்: கணவா் கைது

கடலூா் அருகே இரண்டாவது மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :19 நவம்பர் 2025, 9:49 pm

Syndication

கடலூா் அருகே இரண்டாவது மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கடலூா், திருப்பாதிரிப்புலியூா் காவல் சரகம், எஸ்.என்.சாவடி பகுதியில் வசிப்பவா் திருமுருகன்(34), கூலி வேலை செய்து வரும் இவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு முதல் திருமணம் நடைபெற்று இரண்டு குழந்தைகள் உள்ளனா். 6 ஆண்டுகளுக்கு முன்னா் முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில் உறவினரான ஜோதிலட்சுமியை(24) இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டாா்.

இந்நிலையில், திருமுருகன் புதுச்சேரி பகுதியைச் சோ்ந்த விவாகரத்தான பெண்ணுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடா்பில் உள்ளாராம். கடந்த 13-ஆம் தேதி திருமுருகன், புதுச்சேரியைச் சோ்ந்த பெண்ணுடன் வந்து, ஜோதிலட்சுமியை வீட்டைவிட்டு வெளியே போகக்கூறி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து , ஜோதிலட்சுமி அளித்த புகாரின் பேரில், திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து திருமுருகனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.