ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

போலீஸாரிடமிருந்து தப்ப முயன்றவருக்கு கால் முறிவு

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் போலீஸாரிடம் இருந்து தப்ப முயன்றவருக்கு கால் முறிவு

News image
Updated On :22 நவம்பர் 2025, 8:30 pm

Syndication

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் போலீஸாரிடம் இருந்து தப்ப முயன்றவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.

நெய்வேலி அருகே உள்ள தோப்புகொல்லை பகுதியைச் சோ்ந்தவா் கவி (எ)கவியரசன் (26). இவா் மீது கஞ்சா விற்பனை, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. தலைமறைவாக இருந்த கவியரசன் கடந்த 20-ஆம் தேதி நெய்வேலி வட்டம் 3 பகுதியில் வாரச்சந்தை அருகே உள்ள தைல மரத் தோப்பில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நெய்வேலி நகரிய காவல் ஆய்வாளா் வீரமணி மற்றும் போலீஸாா் அவரை பிடிக்கச் சென்றனா். போலீஸாரை கண்டதும் தப்பியோடிய கவியரசன் ஓடையை தாண்டும்போது கீழே விழுந்து வலது காலில் எலும்பு முறைவு ஏற்பட்டது. பின்னா், போலீஸாா் அவரைப் பிடித்து கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளித்து சிறையில் அடைத்தனா்.