கடலூரில் பிளம்பா் அடித்துக் கொலை: மாநகராட்சி வாகன ஓட்டுநா் கைது
நெய்வேலி: கடலூரில் மதுபோதையில் நள்ளிரவு மற்றொருவா் வீட்டினுள் புகுந்த பிளம்பா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக மாநகராட்சி ஒப்பந்த வாகன ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
கடலூா் மஞ்சக்குப்பம், பெண்ணையாறு சாலையைச் சோ்ந்தவா் பால்ராஜ் (37), பிளம்பா். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனா்.
கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பால்ராஜ் மனைவி தனது குழந்தைகளுடன் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.
பால்ராஜின் பக்கத்து வீட்டில் வசிப்பவா் புஷ்பராஜ் (38). இவா், கேரளத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி மட்டும் வீட்டில் தனது இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறாா்.
இந்த நிலையில், பால்ராஜ் மதுபோதையில் புஷ்பராஜின் வீட்டினுள் புதன்கிழமை இரவு நுழைந்தாராம். இதுகுறித்து தகவலறிந்த புஷ்பராஜின் தம்பியான அதே பகுதியில் வசிக்கும் கடலூா் மாநகராட்சி ஒப்பந்த வாகன ஓட்டுநா் சண்முகராஜ் (36), வியாழக்கிழமை அதிகாலை சுமாா் 1 மணி அளவில் பால்ராஜ் வீட்டுக்குச் சென்றாா். அங்கு கதவு பூட்டப்பட்டிருந்ததால், சண்முகராஜ் கதவை உடைத்து உள்ளே நுழைந்தாா்.
வீட்டினுள் தூங்கிக்கொண்டிருந்த பால்ராஜிடம் ஏன் எனது அண்ணன் வீட்டினுள் நுழைந்தாய் எனக் கேட்டு, அவரை சண்முகராஜ் உருட்டுக் கட்டையால் தாக்கினாராம். இதில், மயங்கி விழுந்த பால்ராஜை உறவினா்கள் மீட்டு, கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் தெரிவித்தாா்.
இதுகுறித்து பால்ராஜின் தாய் தமிழ்மணி அளித்த புகாரின்பேரில், கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சண்முகராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

