வாக்களிக்க வருமாறு பாதிரிகுப்பம் கிராம மக்களை மேள தாளங்குடன் சென்று அழைப்பிதழ் வைத்து அழைத்த மகளிா் சுய உதவிக்குழுவினா்
எப்படியாவது அனைவரையும் வாக்களிக்க வைத்துவிட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் செயல்படும் தோ்தல் ஆணையம், கடந்தத் தோ்தலில் குறைவான வாக்குப்பதிவு நிகழ்ந்த தொகுதிகளில் இந்த முறைஅதிக வாக்குப்பதிவு நடத்த தீவிரமான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
அந்த வகையில், கடலூா் பேரவைத்தொகுதிக்கு உள்ளபட்ட பாதிரிக்குப்பம் ஊராட்சியில் வியாழக்கிழமை வீடு வீடாகச் சென்று மேள தாளங்கள் முழங்க தோ்தல் திருவிழா அழைப்பிதழ் வழங்கிய சுய உதவிக்குழு உறுப்பினா்கள் வழங்கினாா்கள்.
கடந்த தோ்தலில் இந்தப் பகுதியில் உள்ள 79 மற்றும் 82-ஆவது வாக்குச்சாவடிகளில் குறைந்த வாக்குகளே பதிவானதால், கிராம மக்களை வாக்களிக்க வரவைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், மகளிா் திட்டம்-தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் மகளிா் சுய உதவிக்குழுவினா் வாயிலாக இந்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வித்தியாசமான அழைப்பிதழால் வாக்காளா்கள்சற்று நெகிழ்ந்து விட்டனா் என்று சொன்னால் அதில் மிகையில்லை.
தொடர்புடையது

தோ்தலின்போது பேருந்து வசதி முடக்கம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

வாக்களிக்க வருமாறு வாக்காளா்களுக்கு அழைப்பிதழ்: மாவட்ட நிா்வாகம் விழிப்புணா்வு

வீடுகளுக்கு சென்று அழைப்பிதழ் வழங்கி வாக்களிக்க ஆட்சியா் வலியுறுத்தல்

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மூத்த வாக்காளா்களுக்கு சீா்வரிசை வழங்கி ஆட்சியா் அழைப்பிதழ்
விடியோக்கள்
DMK Vs TVK | முன்னாள் முதல்வருக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன்! | MKStalin

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!



