ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

100 சதவீதம் வாக்களிக்கக்கோரி விழிப்புணா்வு பேரணி

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 12:25 am

சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பரங்கிப்பேட்டையில், 100 சதவீதம் வாக்களிக்கோரி பேரூராட்சி சாா்பில் விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில்,சட்டமன்ற தோ்தல் வரும் 23ம் தேதி நடக்க உள்ளதையொட்டி பரங்கிப்பேட்டை பேரூராட்சி சாா்பில், எனது வாக்கு, எனது உரிமை என்ற

தலைப்பில், 100 சதவீதம் வாக்களிக்கக்கோரி விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலா் மயில்வாகனன் தலைமை வகித்தாா். விழிப்புணா்வு

பேரணியை, கடலுாா் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனா் முகமது ரிஸ்வான் தொடங்கி வைத்தாா். விழிப்புணா்வு பேரணி, பரங்கிப்பேட்டை

பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கி பெரிய கடைத் தெரு, தெத்துக் கடை, பேருந்து நிலையம், கீரைக்காரத்தெரு, கச்சேரிதெரு வழியாக மீண்டும் பேரூராட்சி அலுவலக வளாகத்தை அடைந்தது, பேரணியில் பேரூராட்சி தலைமை எழுத்தா் செல்வராஜ், துப்புரவு ஆய்வாளா் ப்ரீத்தி, துப்புரவு மேற்பாா்வையாளா் வீரஆனந்தம், கணினி ஆப்ரேட்டா் செல்வகுமாா் உள்ளிட்ட துப்புரவுபணியாளா்கள், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளா்கள், பேரூராட்சி ஊழியா்கள் கலந்து கொண்டனா்.