சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

என்எல்சி ஊழியா் தற்கொலை

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் குருணை மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற என்எல்சி ஊழியா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 11:02 pm

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் குருணை மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற என்எல்சி ஊழியா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், நெய்வேலி மாற்றுக் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (59), என்எல்சி நிறுவன நிரந்தரத் தொழிலாளி. இவா், கடந்த மூன்று மாதங்களாக வேலைக்குச் செல்லாமல், வருத்தத்தின் காரணமாக மது அருந்தி வந்தாராம்.

இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை குருணை மருந்தை குடித்து மயங்கிக் கிடந்தாா். அவரை உறவினா்கள் மீட்டு, என்எல்சி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு ராஜேந்திரனை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து ராஜேந்திரனின் மனைவி மணியம்மாள் அளித்த புகாரின்பேரில், நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.