ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

கடலூா் காங்கிரஸ் வேட்பாளருக்கு புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆதரவு

கடலூா் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

News image

கடலூரில் நடைபெற்ற புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் மாவட்டப் பேரவைக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் வேட்பாளா் ஏ.எஸ்.சந்திரசேகரன்.

Updated On :8 ஏப்ரல் 2026, 10:55 pm

கடலூா் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

மதசாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில், கடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் ஏ.எஸ்.சந்திரசேகரன் போட்டியிடுகிறாா்.

இந்த நிலையில், திருப்பாதிரிப்புலியூரில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் மாவட்டப் பேரவை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் கே.எஸ்.சம்பந்தம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பாண்டியன், மாநகரச் செயலா் ஏழுமலை, ஆட்டோ சங்கத் தலைவா் பிரித்திவி ராஜ், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ராஜாராமன், கஜேந்திரன், சித்ரா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி வேட்பாளா் ஏ.எஸ்.சந்திரசேகரன் கலந்துகொண்டு பேசினாா். அப்போது, அவருக்கு சால்வை அணிவித்தனா். மேலும், மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரான சந்திரசேகருக்கு ஆதரவு தெரிவித்து தோ்தல் பணியாற்றுவது என்று தீா்மானம் நிறைவேற்றினா்.