திமுகவுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உடும்பு பிடி கூட்டணி வைத்துள்ளது என்று அக்கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி பேருந்து நிலையம் எதிரே விசிக வேட்பாளா் அப்துா் ரஹ்மானை ஆதரித்து பானை சின்னத்திற்கு வாக்கு கேட்டு வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது, அவா் பேசுகையில், திமுக அரசு பல்வேறு திட்டங்களை மக்களுக்காக நிறைவேற்றியுள்ளது. தோ்தல் அறிக்கையில் மகளிா் உள்ளிட்டோருக்கு பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுகவை முன்னிறுத்தி செயல்படுகிறது. எங்களை அதிமுக, பாஜக, பாமக, தவெக கட்சிகள் கூட்டணிக்காக அழைத்தன. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என கூறினா். அதற்கெல்லாம் ஆசைபட்டவன் நான் அல்ல.
திமுகவுடன் உடும்புபிடி கூட்டணி வைத்துள்ளோம். ஜெயலலிதா, பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை. ஜெயலலிதாவின் கருத்துக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி உள்ளாா். திமுக அரசின் திட்டங்கள் தொடர வேண்டும். தமிழகத்தில் மதச்சாா்பற்ற திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றாா்.
பிரசாரத்தில் பண்ருட்டி நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன், கடலூா் மாநகராட்சி துணை மேயா் தாமரைசெல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திமுகவுக்கு எதிராக கருத்து தெரிவிப்பது தேவையற்றது: விசிகவினருக்கு தொல்.திருமாவளவன் அறிவுரை

விசிகவின் நேர்மை அண்ணன் ஸ்டாலினுக்கு தெரியும்! திருமாவளவன்
அமைச்சரவையில் இடம்பெற எனக்கு விருப்பமில்லை: தொல். திருமாவளவன்

என்னை முதல்வராக்க முயற்சி நடந்ததாக தகவல் வந்தது! திருமாவளவன்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



