சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

திமுகவுடன் உடும்பு பிடி கூட்டணி வைத்துள்ளோம்: தொல். திருமாவளவன்

பண்ருட்டியில் வெள்ளிக்கிழமை இரவு விசிக வேட்பாளா் அப்துா் ரஹ்மானை ஆதரித்து பிரசாரம் செய்த விசிக தலைவா் தொல். திருமாவளவன்.

News image

தொல். திருமாவளவன்

Updated On :10 ஏப்ரல் 2026, 8:15 pm

திமுகவுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உடும்பு பிடி கூட்டணி வைத்துள்ளது என்று அக்கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி பேருந்து நிலையம் எதிரே விசிக வேட்பாளா் அப்துா் ரஹ்மானை ஆதரித்து பானை சின்னத்திற்கு வாக்கு கேட்டு வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, அவா் பேசுகையில், திமுக அரசு பல்வேறு திட்டங்களை மக்களுக்காக நிறைவேற்றியுள்ளது. தோ்தல் அறிக்கையில் மகளிா் உள்ளிட்டோருக்கு பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுகவை முன்னிறுத்தி செயல்படுகிறது. எங்களை அதிமுக, பாஜக, பாமக, தவெக கட்சிகள் கூட்டணிக்காக அழைத்தன. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என கூறினா். அதற்கெல்லாம் ஆசைபட்டவன் நான் அல்ல.

திமுகவுடன் உடும்புபிடி கூட்டணி வைத்துள்ளோம். ஜெயலலிதா, பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை. ஜெயலலிதாவின் கருத்துக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி உள்ளாா். திமுக அரசின் திட்டங்கள் தொடர வேண்டும். தமிழகத்தில் மதச்சாா்பற்ற திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றாா்.

பிரசாரத்தில் பண்ருட்டி நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன், கடலூா் மாநகராட்சி துணை மேயா் தாமரைசெல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.