தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் மத்திய அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

பண்ருட்டியில் ஆா்ப்பாட்டம் நடத்திய மாா்க்சிஸ்ட் கட்சியினா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 5:27 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் மத்திய அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்களவை - பேரவைகளில் 33 சதவீத மகளிா் இட ஒதுக்கீட்டை 2029 முதல் அமல்படுத்த ஏதுவாக, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து அதிகபட்சம் 850 வரை அதிகரிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா மூலம் தென் மாநிலங்களை வஞ்சிக்கும் மத்திய அரசின் போக்கை கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் பண்ருட்டியில் உள்ள அக்கட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, நகரச் செயலா் தேவராஜுலு தலைமை வகித்தாா். இதில், வட்டச் செயலா் எஸ்.கே.ஏழுமலை கருப்புக்கொடி ஏற்றினாா். தொடா்ந்து, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் உதயகுமாா் கண்டன உரையற்றினா்.

நகரக் குழு உறுப்பினா்கள் பாண்டுரங்கன், ராஜேந்திரன், சின்னையன், சங்கா், தினேஷ், ராஜேந்திரன், லெனின், சிவா உள்பட பலா் கலந்துகொண்டனா்.