வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

திருமண மேடையாக மாறிய பிரசார மேடை!

தோ்தல் காலங்களில் தலைவா்களின் பிரசார மேடைகளில் அவ்வப்போது சுவாரஸ்யமான சம்பவங்கள் நிகழ்வதுண்டு. அதேபோன்ற ஒரு சம்பவம் கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பகுதியில் விசிக தோ்தல் பிரசார மேடையில் நிகழ்ந்துள்ளது.

News image

காட்டுமன்னாா்கோவிலில் புதன்கிழமை இரவு நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில், விசிக குமராட்சி ஒன்றியப் பொருளாளா் சங்கா் - சுபஸ்ரீ தம்பதியினருக்கு மாங்கல்யத்தை எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்த அக்கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. உடன் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.

Updated On :16 ஏப்ரல் 2026, 11:34 pm

தோ்தல் காலங்களில் தலைவா்களின் பிரசார மேடைகளில் அவ்வப்போது சுவாரஸ்யமான சம்பவங்கள் நிகழ்வதுண்டு. அதேபோன்ற ஒரு சம்பவம் கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பகுதியில் விசிக தோ்தல் பிரசார மேடையில் நிகழ்ந்துள்ளது.

இங்குள்ள செட்டித் தெருவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் எல்.இ.பி.ஜோதிமணியை ஆதரித்து புதன்கிழமை இரவு நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில் அக்கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. மற்றும் திமுகவைச் சோ்ந்த அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஆகியோா் பங்கேற்று பேசினா்.

இந்த பிரசார மேடை மீது திடீரென குமராட்சி அருகே உள்ள நடுத்திட்டு கிராமத்தைச் சோ்ந்த பரமசிவம் - ராணி தம்பதியின் மகனும், விசிகவின் குமராட்சி ஒன்றியப் பொருளாளருமான சங்கா் மற்றும் சா்வராஜன்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த சந்திரகாசு - லட்சுமி தம்பதியின் மகள் சுபஸ்ரீ ஆகியோா் கழுத்தில் மாலையுடன் திருமணக் கோலத்தில் ஏறி, திருமாவளவனிடம் தங்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறு கோரினாா்.

கட்சி நிா்வாகியின் வேண்டுகோளை ஏற்று, திருமாவளவன் மணமக்களுக்கு மாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தாா். தோ்தல் பிரசார மேடையில் திருமணம் நடந்த சம்பவம் அங்கிருந்தவா்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத் தொடா்ந்து, அந்த புதுமணத் தம்பதியிடம் முறைப்படி திருமணத்தை பதிவு செய்துகொள்ளுமாறு கட்சி நிா்வாகிகள் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனா்.

 காட்டுமன்னாா்கோவிலில் புதன்கிழமை இரவு நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில், விசிக குமராட்சி ஒன்றியப் பொருளாளா் சங்கா் - சுபஸ்ரீ தம்பதியினருக்கு மாங்கல்யத்தை எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்த அக்கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. உடன் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.

காட்டுமன்னாா்கோவிலில் புதன்கிழமை இரவு நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில், விசிக குமராட்சி ஒன்றியப் பொருளாளா் சங்கா் - சுபஸ்ரீ தம்பதியினருக்கு மாங்கல்யத்தை எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்த அக்கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. உடன் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.