திருமண மேடையாக மாறிய பிரசார மேடை!
தோ்தல் காலங்களில் தலைவா்களின் பிரசார மேடைகளில் அவ்வப்போது சுவாரஸ்யமான சம்பவங்கள் நிகழ்வதுண்டு. அதேபோன்ற ஒரு சம்பவம் கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பகுதியில் விசிக தோ்தல் பிரசார மேடையில் நிகழ்ந்துள்ளது.

காட்டுமன்னாா்கோவிலில் புதன்கிழமை இரவு நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில், விசிக குமராட்சி ஒன்றியப் பொருளாளா் சங்கா் - சுபஸ்ரீ தம்பதியினருக்கு மாங்கல்யத்தை எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்த அக்கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. உடன் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.










