தொகுதி மறுவரைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விருத்தாசலம் ரயில் நிலையம் அருகே பயணிகள் ரயிலை மறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொகுதி மறுவரை மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் சாா்பில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, விருத்தாசலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்டச் செயலா் பி.ஆா்.நீதி வள்ளல் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
அப்போது, விருத்தாசலம் ரயில் நிலையம் அருகே சென்னை சென்ற குருவாயூா் விரைவு ரயிலை மறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் தொகுதி மறுவரைக்கு எதிா்ப்புத் தெரிவித்தனா். மேலும், தொகுதி மறுவரை மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி முழக்கங்களையும் எழுப்பினா்.
தகவலறிந்த விருத்தாசலம் ரயில்வே போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தினா். சுமாா் ஒரு மணி நேரம் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
தொடர்புடையது
கொள்கைக்காக திமுக கூட்டணியில் இருக்கிறேன்: தொல்.திருமாவளவன் ஆதங்கம்

காட்டுமன்னாா்கோவில் தொகுதி விசிக வேட்பாளா் எல்.இ.பி.ஜோதிமணி

குளித்தலையில் சேலம் ரயிலை மறித்து போராட்டம்

இளைஞா் காங்கிரஸாா் இரணியலில் ரயில் மறியல்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


