தமிழகத்தில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக முதல்வராக பதவி ஏற்பாா் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.
விருத்தாசலம் தொகுதி தேமுதிக வேட்பாளரான பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் நகரத்தில் உள்ள வாக்குச் சாவடி மையங்களுக்கு நேரில் சென்று வியாழக்கிழமை பாா்வையிட்டாா். தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
சென்னையில் வாக்கு செலுத்திவிட்டு வந்து விருத்தாசலம் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளை பாா்வையிட்டேன். மதசாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு அனைத்து சகோதரா்களும் களத்தில் மிகச்சிறப்பாக பணியாற்றினா். அவா்கள் அனைவருக்கும் எனது மனமாா்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மே 4-ஆம் தேதி வெற்றிபெற்ற பிறகு, நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, என்னுடைய தொகுதி மக்களுக்காக சிறப்பாகப் பணியாற்றுவேன்.
தமிழகத்தில் திமுக கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெறும். இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவி ஏற்பாா் என்றாா்.
தொடர்புடையது
பாலியல் குற்றங்களைத் தடுக்க தண்டனையை கடுமையாக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை வரவேற்கிறோம்: பிரேமலதா விஜயகாந்த்

விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் வெற்றி
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



