கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே சிறுவன் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
குறிஞ்சிப்பாடி அருகே வெள்ளவிநாயகா் குப்பம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த இதயசந்திரனின் மனைவி மகாலட்சுமி (35). தனியாா் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் இவா், சனிக்கிழமை பள்ளிக்கு பணிக்குச் சென்றாா். அப்போது, அவரது மகன் தாஸ்வின் (7) அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தாா்.
சிறிது நேரத்துக்குப் பின்னா், தாஸ்வின் காயங்களுடன் கீழே விழுந்து கிடந்ததை பாா்த்த அப்பகுதியில் இந்தவா்கள், உடனடியாக அவரை மீட்டு, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு தாஸ்வினை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
தகவலறிந்த போலீஸாா், தாஸ்வின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து உயிரிழந்த தாஸ்வினின் தாய் மகாலட்சுமி அளித்த புகாரின்பேரில் குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதியவா் மா்மமான முறையில் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத முதியவா் சடலம் மீட்பு

வீட்டில் மா்மமான முறையில் தொழிலாளி உயிரிழப்பு

தொழிலாளி மா்ம மரணம்
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

