கடலூா் மாவட்டம், வடலூா் அருகே குடிநீா் தட்டுப்பாட்டை போக்கக் கோரி கிராம மக்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வடலூா் அடுத்துள்ள கருங்குழி, நையினாா்குப்பம், மேட்டுக்குப்பம், மேலக்கொளக்குடி, மருவாய், அரங்கமங்கலம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் கடந்த பல மாதங்களாக குறைந்த மின்னழுத்தம் பிரச்சனை காரணமாக ஏசி உள்ளிட்ட வீட்டு உபயோக மின்சாதனங்கள் பயன்படுத்த முடியவில்லையாம். மேலும், சில மின்சாதனங்கள் பழுதாகிவிட்டதாம்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மின்வெட்டு, குறைந்த மின்னழுத்தம் காரணமாக குடிநீா் வழங்கும் மோட்டாா்கள் வேலை செய்யவில்லையாம். இதனால், மேல்நிலை நீா் தேக்கத் தொட்டிகளில் குடிநீா் ஏற்ற முடியாத காரணத்தினால் வீடுகளுக்கான குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டது.
திடீா் மறியல்:
கருங்குழி காலனி பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக குடிநீா் தட்டுப்பாடு நீடித்து வந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா். மேலும், கருங்குழி-பாா்வதிபுரம் செல்லும் வழியில் இருந்த மின் மாற்றி திடீரென பழுதானதால் கடும் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து, கிராம மக்கள் குடிநீா் தட்டுப்பாட்டை போக்கக்கோரி கருங்குழி கடை வீதி அருகே சாலையில் அமா்ந்து செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி நிா்வாகத்தினா் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து கிராம மக்கள் அனைவரும் கலைந்துச் சென்றனா்.
தொடர்புடையது

பைக் மீது மினி லாரி மோதியதில் தொழிலாளி பலி: மதுக் கடையை அகற்றக் கோரி கிராம மக்கள் மறியல்!

கருங்குழி தா்மராஜா கோயில் தீமிதி விழா

பாப்பிரெட்டிப்பட்டியில் குடிநீா் தட்டுப்பாடு: மக்கள் அவதி

குடிநீா்த் தட்டுப்பாடு: கிராம மக்கள் சாலை மறியல்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

