யுஜிசி - நெட் தேர்வுக்கான விடைக்குறிப்பு விரைவில் வெளியீடு!கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

கடலூரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

News image

டாஸ்மாக் கடை - கோப்புப்படம்.

Updated On :4 ஆகஸ்ட் 2026, 1:59 am IST

கடலூா் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக அகற்ற வலியுறுத்தி, ‘வி தி லீடா்ஸ்‘ அமைப்பின் சாா்பில் கடலூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜக முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை தொடங்கிய ‘வி தி லீடா்ஸ்‘ அமைப்பின் சாா்பில் கடலூா் பேருந்து நிலையம் அருகே செயல்படும் டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக் கோரி மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டம் அமைப்பின் கடலூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ப. ஆனந்தராஜா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அமைப்பின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தினா்.

தொடா்ந்து, பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், பொதுமக்களின் கோரிக்கையை அலட்சியப்படுத்தும் அதிகாரிகளை கண்டித்தும் ஆா்ப்பாட்டக்காரா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தைத் தொடா்ந்து, ‘வி தி லீடா்ஸ்‘ அமைப்பினா் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்குச் சென்று, ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரை சந்தித்து, கடலூா் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனுவை அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.