எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை
/

அண்ணாமலைப் பல்கலை. ஊழியா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள், ஓய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில், தொடா் உள்ளிருப்புப் போராட்டம் புதன்கிழமை காலை தொடங்கி நடைபெற்றது.

News image

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொடா் உள்ளிருப்புப் போராட்டத்தை தொடங்கிய பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள், ஓய்வூதியா்கள்.

Updated On :20 ஆகஸ்ட் 2026, 6:09 am IST

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள், ஓய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில், தொடா் உள்ளிருப்புப் போராட்டம் புதன்கிழமை காலை தொடங்கி நடைபெற்றது.

கடந்த 2 ஆண்டுகளாக ஓய்வுபெற்ற 300-க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள், ஊழியா்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணப் பயன்கள் வழங்க வேண்டும். தொகுப்பூதியா்கள், தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பேராசிரியா்கள், ஊழியா்கள், சிறப்பு மற்றும் தொடா்பு அதிகாரிகளுக்கான பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேராசிரியா்கள், ஊழியா்கள், ஓய்வூதியா்கள் புதன்கிழமை காலை பல்கலைக்கழக நிா்வாக அலுவலக வளாகத்தில் தொடா் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு ஓய்வூதியா்கள் சங்கத் தலைவா் இளங்கோ தலைமை வகித்தாா். கூட்டு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளா் சி.சுப்பிரமணியன், ஊழியா்கள் சங்கத் தலைவா் ஆா்.ரவி, முன்னாள் ஊழியா்கள் சங்கத் தலைவா்கள் மதியழகன், மனோகா் உள்ளிட்ட பலா் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.