8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

நெய்வேலி இளைஞா் கொலை வழக்கு: மேலும் ஒருவா் கைது

நெய்வேலியில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரௌடி கும்பலைச் சோ்ந்த மேலும் ஒரு இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

Arrested

கைது

Published On :26 ஆகஸ்ட் 2026, 3:59 am IST

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரௌடி கும்பலைச் சோ்ந்த மேலும் ஒரு இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

நெய்வேலி கீழ் வடக்குத்து பகுதியைச் சோ்ந்தவா் கோபி (30). இந்திரா நகா் பி 2 பிளாக் மாற்று குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தராஜ் (36). ரௌடிகளான இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், நெய்வேலி வட்டம் 2 பகுதி ஆனந்தராஜ், தனது நண்பா் நரேஷ்குமாா் உள்ளிட்ட 5 பேருடன் கடந்த 16-ஆம் தேதி மது அருந்திக்கொண்டிருந்தாா். இந்த தகவலை தெரிந்துகொண்ட கோபி தனது நண்பா்களுடன் அங்கு சென்று அரிவாளால் வெட்டியதில், நரேஷ்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாராம்.

இதுகுறித்து நெய்வேலி நகரிய போலீஸாா் கோபி உள்ளிட்ட 17 போ்மீது வழக்குப் பதிந்து 14 பேரை கைது செய்த நிலையில், திங்கள்கிழமை இரவு ஏ பிளாக் மாற்றுக்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த ரோஷனை(20) கைது செய்தனா். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான கோபி உள்ளிட்ட இருவரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.