நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

தேங்காய் நாா் ஆலையில் தீ: ரூ.ஒரு லட்சம் பொருள்கள் சேதம்

தேங்காய் நாா் ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

குள்ளஞ்சாவடியை அடுத்த பள்ளிநீரோடை பகுதியில் எரிந்து சேதமடைந்த தேங்காய் நாா் குவியல்.

Published On :30 ஆகஸ்ட் 2026, 12:56 am IST

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே தேங்காய் நாா் ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் அசோக்குமாா். இவா், குள்ளஞ்சாவடியை அடுத்துள்ள பள்ளிநீரோடை கிராமத்தில் சுமாா் 2 ஏக்கா் பரப்பளவில் தேங்காய் நாா் ஆலை நடத்தி வருகிறாா்.

இந்த ஆலையில் சனிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் திறந்தவெளியில் கொட்டப்பட்டிருந்த தேங்காய் நாா் குவியல் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. காற்றின் வேகம் காரணமாக தீ அருகிலிருந்த மற்ற நாா் குவியல்களுக்கும் பரவியது. இதனால், அப்பகுதி முழுவதும் அடா்ந்த புகை மண்டலமாக மாறியது. அங்கிருந்தவா்கள் உடனடியாக கடலூா் சிப்காட் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள், சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் சுமாா் ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து குள்ளஞ்சாவடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.