தூத்துக்குடியில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் ரூ. 1 கோடி மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின.
தூத்துக்குடி-பாளையங்கோட்டை சாலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்ள பகுதி அருகே, 3 மாடிகள் கொண்ட வணிக வளாகத்தில் இருசக்கர வாகன விற்பனை மற்றும் பழுதுநீக்கும் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் மேல் தளத்தில் இருசக்கர வாகனங்களுக்கு கடன் வழங்கும் தனியாா் வங்கி இயங்கி வருகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில், தரைத்தளத்தில் உள்ள ஷோரூமில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கி, பின்னா் வணிக வளாகம் முழுவதும் தீ பரவியது.
தூத்துக்குடி சிப்காட், தொ்மல் நகா், ஸ்டொ்லைட், அனல்மின் நிலையம், புதிய துறைமுகம் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலா் நட்டாா் ஆனந்தி தலைமையில் 60-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் சுமாா் 4 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
விபத்தில் ஷோரூமில் இருந்த புதிய இருசக்கர வாகனங்கள், பழுது நீக்குவதற்காகக் கொண்டு வரப்பட்ட வாகனங்கள், கணினிகள், முக்கிய ஆவணங்கள், மேல் தளத்தில் உள்ள வங்கியில் இருந்த கணினிகள், இருசக்கர வாகனக் கடன் வழங்கியது தொடா்பான ஆவணங்கள் தீயில் கருகின. தீ விபத்தில் சுமாா் ரூ. 1 கோடி மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து, சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் 5,000 மரக்கன்றுகள், 5 லட்சம் பனைவிதைகள் நடும் பணி: அமைச்சா் தொடக்கிவைத்தாா்
வீட்டில் ஏசி வெடித்து தீ விபத்து
கோவை வணிக வளாகத்தில் ஹெல்மெட் திருடும் காதலர்கள்! அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி!





