FOLLOW US

ON GOOGLE DISCOVER

விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்! அமைச்சர்விரைவில் பிளாஸ்டிக் ரூ.10, ரூ.20 தாள்கள்! புழக்கத்தில் இருக்கும் பணம் என்னவாகும்?நிலவில் மோதிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் பகுதி! அதிர்ச்சி விடியோ! எவ்வளவு பெரிய பள்ளம்?அடுத்த ஜென்மம் எதற்கு? இப்போதே விவசாயிகளுக்கு செய்யலாமே! பிரேமலதாதைரியம் இருந்தால் முதல்வர் வாயைத் திறக்கட்டும்! உதயநிதி சவால்! வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதல்வரின் உச்சிகுளிர பாராட்டு மழை: ஸ்டாலின்வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்: முதல்வர் விஜய்உருப்படியாக எதுவுமில்லை! வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த உதயநிதி! அமைச்சர் ஆனந்துடன் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் அணி சந்திப்பு!கரூரில் தென்னை நாற்றுப்பண்ணை! பட்ஜெட்டில் தென்னை, பனை பாதுகாப்புத் திட்டங்கள்!வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்: எடப்பாடி பழனிசாமிதஞ்சாவூரில் நம்மாழ்வார் வேளாண் பாலிடெக்னிக் கல்லூரி! பட்ஜெட்டில் அறிவிப்பு!எல் நினோவால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம்! அமைச்சர் வினோத் உரைதமிழக வேளாண் பட்ஜெட்! வெற்றி விவசாய விருதுகள் அறிவிப்புஉயிர்ம உர விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு நம்மாழ்வார் விருதுவிவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு!
/

கோவை வணிக வளாகத்தில் ஹெல்மெட் திருடும் காதலர்கள்! அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி!

கோவை வணிக வளாகத்தில் காதலர்கள், ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற சம்பவம் பற்றி...

News image

சிசிடிவி காட்சி - DIN

Updated On :6 ஆகஸ்ட் 2026, 1:36 pm IST

கோவையில் தனியார் வணிக வளாகத்திற்கு பொருள்கள் வாங்குவதுபோல வந்து, யாரும் இல்லாத நேரத்தில் பார்க்கிங்கில் உள்ள ஹெல்மெட்டை காதலர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த ஹைப்பர் மார்க்கெட்க்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் தான் புதியதாக வாங்கிய தலைக்கவசத்துடன் சென்ற இளைஞர் ஒருவர், தனது வாகனத்தை, வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு தலைக்கவசத்தை பூட்டாமல் பொருள்கள் வாங்குவதற்காக உள்ளே சென்றுள்ளார்.

சற்று நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபொழுது அவரது இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த தலைக்கவசம் காணாமல் போயிருந்தது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து தொடர்ந்து ஹைப்பர் மார்க்கெட்டில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை இளைஞர் ஆய்வு செய்துள்ளார்.

அப்பொழுது அதில் கண்ட காட்சி அவருக்கு திடுக்கிட செய்துள்ளது.

பொருள்கள் வாங்குவதுபோல டிப்டாப் உடையில் வந்த காதல் ஜோடி, அங்கு வைக்கப்பட்டு இருந்த பல்வேறு தலைக்கவசங்களை நோட்டமிட்டு அதில் மிகவும் புதியதாக நல்லதாக இருப்பதை பார்த்து வைத்து விட்டு, சுற்றி முற்றியும் யாரும் வருகிறார்களா? என்று சோதனை செய்து பின்னர் ஆள்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதை உணர்ந்து, ஹைப்பர் மார்க்கெட் உள்ளே சென்று மீண்டும் திரும்புகின்றனர்.

பின்னர் ஏற்கனவே அவர்கள் தேர்வு செய்து வைத்திருந்த ஹெல்மட்டை திருடுவதற்காக அந்த வாகனத்தின் அருகே சென்ற அந்த நபர், தலையை சீவுவதுபோல கண்ணாடியை பார்த்துவிட்டு யாரும் பார்க்காத நேரத்தில் விலை உயர்ந்த தலைக்கவசத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து இருவரும் சென்று விட்டனர்.

இதனைக் கண்ட இளைஞர் அதிர்ச்சியுடன் அந்த காட்சிகளைக் கொண்டு ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தலைக்கவசத்தை திருடும் காதலர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

காதலர்கள் ஹெல்மெட் திருடும் விடியோ காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Summary

Couple steals a helmet from a Coimbatore shopping complex

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.