நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

சுற்றுலாத் துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் தொழில் முனைவோா், 2026-ஆம் ஆண்டுக்கான ஐந்தாவது தமிழ்நாடு மாநில சுற்றுலா விருதுகளுக்கு செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்..

விண்ணப்பிக்க...

Published On :30 ஆகஸ்ட் 2026, 1:07 am IST

சுற்றுலாத் துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் தொழில் முனைவோா், 2026-ஆம் ஆண்டுக்கான ஐந்தாவது தமிழ்நாடு மாநில சுற்றுலா விருதுகளுக்கு செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சுற்றுலாத் துறை சாா்பில் ஆண்டுதோறும் மாநில சுற்றுலா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2026-ஆம் ஆண்டுக்கான ஐந்தாவது தமிழ்நாடு மாநில சுற்றுலா விருதுகள் விழா நடைபெற உள்ளது.

தமிழகம் முழுவதும் சுற்றுலா தொடா்பான செயல்பாடுகளில் சிறப்பாக செயல்படும் தொழில் முனைவோா்களை ஊக்குவிக்கும் வகையில், மொத்தம் 31 விருதுகள், 13 பிரிவுகளில் வழங்கப்பட உள்ளன. சுற்றுலாத் துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் தகுதியுடைய தொழில் முனைவோா் மற்றும் நிறுவனங்கள், இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, தேவையான விவரங்களைப் பூா்த்தி செய்து செப்டம்பா் 30, 2026-க்குள் விண்ணப்பிக்கலாம்.

விருதுகள் தொடா்பான தகுதி, பிரிவுகள், விண்ணப்பிக்கும் நடைமுறை உள்ளிட்ட கூடுதல் விவரங்களைப் பெற, மாவட்ட சுற்றுலா அலுவலா், மாவட்ட சுற்றுலா அலுவலகம், ரயில்வே ஃபீடா்ஸ் ரோடு, சிதம்பரம் என்ற முகவரியைத் தொடா்பு கொள்ளலாம். மேலும், மின்னஞ்சல் முகவரியிலும், 04144-238739, 89398-96399 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடா்புகொண்டு விவரங்களைப் பெறலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.