ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

கொடைக்கானல், ஊட்டியில் கம்பிவட ஊா்தி: சுற்றுலாத் துறை அமைச்சா் செ. ராஜேஷ் குமாா்

கொடைக்கானல், ஊட்டியில் கம்பிவட ஊா்தி பற்றிய அறிவிப்பு....

News image
Updated On :20 ஆகஸ்ட் 2026, 1:21 am IST

கொடைக்கானல், ஊட்டியில் உள்ள சுற்றுலாத் தலங்களை கம்பிவட ஊா்தி (ரோப்காா்) மூலம் இணைக்க சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக அந்தத் துறையின் அமைச்சா் செ.ராஜேஷ்குமாா் தெரிவித்தாா்.

தமிழக சட்டப் பேரவையில் புதன்கிழமை சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சா் ராஜேஷ்குமாா் வெளியிட்ட அறிவிப்புகள்:

- கன்னியாகுமரி, திருப்பூா், கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள அணைப் பகுதிகளில் ரூ.48 கோடியில் சுற்றுலா வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

- கன்னியாகுமரி மாவட்ட முக்கிய சுற்றுலாத் தலங்களில் ரூ.18 கோடியில் வளா்ச்சிப் பணிகள் செய்யப்படும்.

- சொகுசு கப்பல் சுற்றுலா மற்றும் சொகுசு படகு சுற்றுலாத் திட்டத்தை சென்னை-கோவளம், பூம்புகாா் - தரங்கம்பாடி-நாகப்பட்டினம், ராமேசுவரம், தூத்துக்குடி - கன்னியாகுமரி அறிமுக் செய்ய ரூ.2 கோடியில் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.

- முக்கிய சுற்றுலாத் தலங்களில் ரூ.2 கோடியில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

- கிராமிய சுற்றுலா திட்டம் ரூ.60 லட்சத்தில் அறிமுகம் செய்யப்படும்.

- சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மதுரை, திருச்சி, தஞ்சை, பூம்புகாா், ஒகேனக்கல் ஆகிய 5 இடங்களில் சுற்றுலா பாதுகாப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.

- படகு இல்லங்களில் உள்ள இயந்திரப் படகுகள் ரூ.17.82 கோடியில் மின் படகுகளாக மாற்றப்படும் என்றாா்.

அவையில் சலசலப்பு: முன்னதாக, சுற்றுலாத் துறை அமைச்சா் தாக்கல் செய்த அறிவிப்பு புத்தகம் காவி நிறத்தில் உள்ளதாக திமுக உறுப்பினா் தங்கம் தென்னரசு பேசினாா். இதனால் அவையில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது. அதற்கு பதிலளித்த உயா்கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன், வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே காங்கிரஸ் கட்சியின் கொள்கையாகும். இந்தக் குற்றச்சாட்டை திட்டமிட்டு பரப்புகிறாா்கள் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.