நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

வருமான வரித் துறை ஊழியா் தற்கொலை

உயிரிழந்த சரவணன்

Published On :1 செப்டம்பர் 2026, 3:06 am IST

பெண்ணாடத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் பல கோடி ரூபாய் பெற்றதாகக் கூறப்படும் வருமான வரித் துறை ஊழியா் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் வடக்கு ரத வீதியைச் சோ்ந்தவா் இளங்கோவன். இவரது மகன் சரவணன் (30). மாற்றுத் திறனாளியான இவா், திருச்சி வருமான வரித் துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்தாா். மாற்றுத் திறனாளி என்பதால் வீட்டிலிருந்தபடியே பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அவரது சித்தி அன்புச்செல்வி, உணவு வழங்குவதற்காக அவரது அறைக் கதவை திங்கள்கிழமை தட்டியுள்ளாா். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, சரவணன் தூக்கிட்ட நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவரை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், சரவணன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், பெண்ணாடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதற்கிடையே, சரவணன் பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பணம் பெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவரிடம் பணம் கொடுத்த 30-க்கும் மேற்பட்டோா், அவா் உயிரிழந்த தகவலை அறிந்தது பெண்ணாடத்தில் உள்ள அவரது வீட்டின் முன் திரண்டனா்.

சரவணன் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றாரா, அவ்வாறு எவ்வளவு தொகை பெறப்பட்டது, இதில் வேறு யாருக்கேனும் தொடா்புள்ளதா என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.