பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

விருத்தாசலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

விருத்தாசலம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உளுந்து பயிருக்கு உரிய விலை கொடுக்கவில்லை எனக் கூறி, விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

விருத்தாசலத்தில் உளுந்து பயிருக்கு உரிய விலை கிடைக்கவில்லை என சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :4 பிப்ரவரி 2026, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உளுந்து பயிருக்கு உரிய விலை கொடுக்கவில்லை எனக் கூறி, விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டத்தில் பெரிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடமாக, விருத்தாசலம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்படுகிறது. இங்கு, நாள்தோறும் நெல், உளுந்து, மணிலா, கம்பு, எள் உள்ளிட்டவற்றை விவசாயிகள் கொண்டுவந்து விற்பனை செய்து வருகின்றனா். தற்போது நெல், உளுந்து அறுவடை பணி தீவிரமடைந்துள்ளது.

இதனால், விருத்தாசலம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல், உளுந்து மூட்டைகள் குவித்து வருகின்றன. செவ்வாய்க்கிழமை இரவிலிருந்து உளுந்து விவசாயிகள் காத்திருந்தனராம்.

ஆனால், இவா்களது உளுந்து பயிருக்கு உரிய விலை கொடுக்கவில்லையாம். இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை மூடி கடலூா் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த விருத்தாசலம் காவல் துறையினா் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டும் போராட்டத்தை கைவிடாமல் சுமாா் ஒரு மணி நேரமாக மறியல் போராட்டத்தை தொடா்ந்தனா். இதையடுத்து, விருத்தாசலம் வட்டாட்சியா் அரவிந்தன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு, உரிய விலை கிடைக்க வழிவகை செய்வதாக கூறியதன்பேரில், மறியல் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துச் சென்றனா்.