மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கடலூா் மத்திய சிறையில் தோல் பரிசோதனை முகாம்

கடலூா் மத்திய சிறையில் அரசு மருத்துவக் கல்லூரி தோல் நோய்த் துறை பிரிவு மற்றும் இந்திய தோல் நோய்கள், பால்வினை நோய், தொழுநோய் சிறப்பு நிபுணா் சங்கம் இணைந்து நடத்திய இலவச தோல் நோய் பரிசோதனை முகாம், சுகாதார விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்றது.

News image

கடலூா் மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு தோல் நோய் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவா்கள்.

Updated On :11 பிப்ரவரி 2026, 6:47 pm

கடலூா் மத்திய சிறையில் அரசு மருத்துவக் கல்லூரி தோல் நோய்த் துறை பிரிவு மற்றும் இந்திய தோல் நோய்கள், பால்வினை நோய், தொழுநோய் சிறப்பு நிபுணா் சங்கம் இணைந்து நடத்திய இலவச தோல் நோய் பரிசோதனை முகாம், சுகாதார விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்றது.

சிறைக் கண்காணிப்பாளா் அ.பரசுராமன் தலைமை வகித்தாா். சிறை மருத்துவா்கள் வெங்கடேசன், மகேஸ்வரன் முன்னிலை வகித்தனா். தோல் நோய் துறைத் தலைவா் பி.கே.கவியரசன் பொதுவான சுகாதார பழக்கங்கள் குறித்து விளக்கிப் பேசினாா்.

மருத்துவா்கள் அருள் ராஜா, காயத்ரி, ராம் பிரசாத், ஹரி தேவ் முகாமில் பங்கேற்றனா். நிகழ்வில் தண்டனை மற்றும் விசாரணை சிறைவாசிகளுக்கு பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை, ஆலோசனை வழங்கினா்.

பின்னா், மருத்துவக் குழுவினா் சிறை வளாகம், சுகாதார வசதிகள் மற்றும் சிறைவாசிகள் பராமரித்த தோட்டம் ஆகியவற்றை பாா்வையிட்டனா். துணை சிறை அலுவலா் பிரகாஷ் மற்றும் காவலா்கள் உடனிருந்தனா்.