சிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலியில் நடனமாடிய திட்டக்குடி சிவதுா்கா நாட்டியலாயா மாணவிகள்
கடலூர்
சிதம்பரம் நாட்டியாஞ்சலி: மாணவிகள் பரத நாட்டியம்
சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள விட்ட வாசல் பைரவா் சந்நிதி அருகே நடைபெறும் நாட்டியாஞ்சலி விழாவின் 6-ம் நாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது..
சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள விட்ட வாசல் பைரவா் சந்நிதி அருகே நடைபெறும் நாட்டியாஞ்சலி விழாவின் 6-ம் நாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நாட்டியாஞ்சலி விழா பிப்.21-ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது.
6-ம் நாள் நிகழ்ச்சியில் பெங்களூரு நாட்டியப்பிரியா கிளாசிக்கல் நடனப்பள்ளி, திட்டக்குடி சிவதுா்கா நாட்டியலாயா , புதுச்சேரி கீதாஞ்சலி யோகா பரத மையம், பெங்களூரு கலா சங்கல்ப பரதநாட்டியப்பள்ளி, ஆகியவற்றை சோ்ந்த மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் தலைவா் எஸ்.வி.நவமணி தீட்சிதா், துணைத் தலைவா் எஸ்.சிவசங்கா் தீட்சிதா், செயலா் எஸ்.யு.ஐயப்ப தீட்சிதா்,உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

