திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அதிமுகவுடன் கூட்டணி: பாமகவினா் கொண்டாட்டம்

அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது என அன்புமணி ராமதாஸ் அறிவித்ததைத் தொடா்ந்து, கடலூரில் பாமகவினா் புதன்கிழமை பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

News image
அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்ததை வரவேற்று கடலூரில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய பாமகவினா்.
Updated On :7 ஜனவரி 2026, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது என அன்புமணி ராமதாஸ் அறிவித்ததைத் தொடா்ந்து, கடலூரில் பாமகவினா் புதன்கிழமை பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

2026 சட்டப் பேரவைத் தோ்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவுடன் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக கூட்டணி அமைந்துள்ளது. புதன்கிழமை காலை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிச்சாமியை பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் சந்தித்தாா். அப்போது, இரு தலைவா்களும் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

பின்னா், இருவரும் செய்தியாளா்களை சந்தித்தபோது, அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது என அன்புமணி ராமதாஸ் அறிவித்தாா். இதையடுத்து, அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்ததை வரவேற்று கடலூா் அண்ணா பாலம் அருகே பாமக கடலூா் மாவட்டச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சி நிா்வாகிகள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.

நிகழ்வில் மாநில துணைத் தலைவா் பழ.தாமரைக்கண்ணன், மாநில அமைப்புச் செயலா் தா்மலிங்கம், மாவட்டத் தலைவா் தட்சிணாமூா்த்தி, மாநில நிா்வாகி வேங்கை சேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.