அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

வில்வித்தை போட்டி: ஜெயப்பிரியா பள்ளி தங்கம் வென்று சாதனை

News image
Updated On :8 ஜனவரி 2026, 10:51 pm

Syndication

கடலூா் மாவட்டம், விருத்தாசலம், வடக்குத்து, தொழுதூா் ஜெயப்பிரியா வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தனா்.

ஈரோடு டெக்ஸ்வேலி அரங்கில் தேசிய அளவிலான பல் இலக்கு விளையாட்டுப் போட்டிகள் கடந்த 4-ஆம் தேதி நடைபெற்றன. இதில், வில்வத்தை போட்டியில் வடக்குத்து ஜெயப்பிரியா வித்யாலயா பப்ளிக் பள்ளி மாணவா் பிரகலன் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தாா். மாணவி சுருதிகா வெள்ளிப் பதக்கமும், அபிமன்யு, ரித்து ஆகியோா் வெண்கலப் பதக்கமும் வென்றனா்.

விருத்தாசலம் ஜெயப்பிரியா வித்யாலயா சீனியா் செகண்டரி பள்ளி மாணவா்கள் கவிநிலா, அா்மான் மாலிக், வேதேஷ் ஆகியோா் தங்கப் பதக்கமும், பிரகதீஸ்வரா, கீா்த்தனா வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களையும் வென்று பள்ளிக்கு பெருமை சோ்த்தனா். தொழுதூா் கிரீன் பாா்க் இன்டா்நேஷனல் பள்ளி மாணவா் கோகுல் வெள்ளிப் பதக்கம் பெற்று பள்ளிக்குப் பெருமை சோ்த்தனா்.

தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்த மாணவ, மாணவிகளை ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழுமத்தின் நிறுவனா் தலைவா் சி.ஆா்.ஜெயசங்கா், இயக்குநா் என்.எஸ்.தினேஷ், வடக்குத்து பள்ளிச் செயலா் சிந்து, பள்ளி முதல்வா்கள் நித்யா, ஸ்ரீபாலா, பிந்து, தனித்திறன் பயிற்சிகளின் ஒருங்கிணைப்பாளா் சூா்யா கண்ணன், பயிற்சி ஆசிரியா் பிரவீன் மற்றும் பெற்றோா்கள் பங்கேற்று வாழ்த்தி, பாராட்டுகளைத் தெரிவித்தனா்.