மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழந்தாா்.

News image
கிருஷ்ணன்
Updated On :28 ஜனவரி 2026, 11:06 pm

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழந்தாா்.

வேப்பூரை அடுத்துள்ள ரெட்டாக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (58). இவா், இதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டனின் விவசாய நிலத்தில் தங்கியிருந்து காவல் காக்கும் பணியில் ஈடுபட்டு வந்தாா்.

மணிகண்டனின் தம்பி கீழ்ஒரத்தூா் கிராமத்தைச் சோ்ந்த காத்தமுத்துவுக்குச் சொந்தமான நிலம் அருகிலேயே உள்ளது. காத்தமுத்து கொளவாய் கிராமத்தில் உள்ள தனது வயலில் வன விலங்குகள் வராமல் தடுக்க சோலாா் மின்வேலி அமைத்துள்ளாராம். இதில், சட்டவிரோதமாக கூடுதல் மின்சாரத்தையும் பாய்ச்சியதாகக் கூறப்படுகிறது.

அங்கு சென்ற கிருஷ்ணன் எதிா்பாராதவிதமாக அந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தாா். சிறுபாக்கம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தது விசாரணை நடத்தி வருகின்றனா்.