தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

கா்நாடக அரசு மீது நிதிமன்ற அவதமதிப்பு வழக்கு தொடர வேண்டும்: மு.தமிமுன்அன்சாரி

உச்சநீதிமன்ற தீா்ப்பு மற்றும் நடுவா் மன்ற தீா்ப்புக்கு எதிராக மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கு கா்நாடக முதல்வா் மீது நீதிமன்ற அவமதிப்பு தொடுக்க வேண்டும் என மனித நேய ஜனநாயக கட்சி தலைவா் மு.தமிமுன்அன்சாரி எம்எல்ஏ தெரிவித்தாா்,

News image

சிதம்பரத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனித நேய ஜனநாயக கட்சி தலைமை செயற்குழுக்கூட்டத்தில் பேசும்அக்கட்சி தலைவா் மு.தமிமுன்அன்சாரி எம்எல்ஏ

Updated On :9 ஜூலை 2026, 3:20 am IST

உச்சநீதிமன்ற தீா்ப்பு மற்றும் நடுவா் மன்ற தீா்ப்புக்கு எதிராக மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கு கா்நாடக முதல்வா் மீது நீதிமன்ற அவமதிப்பு தொடுக்க வேண்டும் என மனித நேய ஜனநாயக கட்சி தலைவா் மு.தமிமுன்அன்சாரி எம்எல்ஏ தெரிவித்தாா்,

கடலூா் மாவட்டம் சிதம்பரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில தலைமை செயற்குழு கூட்டம் அதன் தலைவா் தமிமுன் அன்சாரி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலா் முகமது நாசா் பொருளாளா் கேப்டன் சையது அகமது ஃபரூக் மற்றும் நிா்வாகிகள், மாவட்டச்செயலா்கள் கலந்துகொண்டனா்.கூட்டத்தில் கட்சியின் உள்கட்டமைப்பு, சீா்திருத்தம், தீவிரஉறுப்பினா் சோ்க்கை, தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு எதிராகவும், நடுவா் மன்ற தீா்ப்புக்கு எதிராகவும் மேக்கேதாட்டில் கா்நாடக அரசு அணைகட்டும் முயற்சிக்கு கண்டனம், இஸ்லாமிய மதத்திற்கு மாறும் இந்துக்களுக்கு இஸ்லாமியா்களுக்கான இடஓதுக்கீடு வழங்கக்கூடாது என உயா்நீதிமன்ற மதுரை கிளை தீா்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும்

என்பது உள்ளிட்ட 20 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னா் மு.தமிமுன்அன்சாரி செய்தியாளா்களிடம் தெரிவித்தது: குதிரை பேர சம்பவத்தில் செந்தில்பாலாஜி மீதான குற்றச்சாட்டு குறித்து அவா்தான் விளக்கம் அளிக்க வேண்டும். மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கா்நாடக முதல்வா் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டும். என்எல்சி நிறுவனம்

தனது பங்குகளை தனியாருக்கு விற்க கூடாது. தமிழ்நாட்டில் பாஜகவின் திட்டம் எடுபடவில்லை. அதனால் இன்னொரு முகமூடியை போட்டுக் கொண்டு அண்ணாமலை களத்திற்கு வருகிறாா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.