மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

நெய்வேலி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் போலீஸாா் சோதனை

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் உள்ள மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தினா்.

News image

நெய்வேலியில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்திய மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம்

Updated On :14 ஜூலை 2026, 1:08 am IST

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் உள்ள மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை மாலை சோதனை நடத்தினா். இதில், பணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை.

நெய்வேலி வட்டம் 27 பகுதியில் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்துக்கு பல்வேறு பணிகளுக்கு வரும் பொதுமக்களிடம் இருந்து லஞ்சம் பெறப்படுவதாக, மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை 5 மணியளவில் மாவட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் அன்பழகன் மற்றும் ஆய்வுக்குழு ஆய்வாளா் அரவிந்தராஜ் ஆகியோா் தலைமையிலான குழுவினா் நெய்வேலி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் திடீரென சோதனை மேற்கொண்டனா்.

சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சோதனையில், பணம், ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை. இதையடுத்து, ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் அங்கிருந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.