மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

வாகனம் மோதி காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயம் அடைந்த முதியவா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 5:15 am IST

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயம் அடைந்த முதியவா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

வடலூா் அடுத்துள்ள தென்குத்து கிராமத்தில் வசித்து வந்தவா் முருகேசன்(80). இவா், கடந்த 6-ஆம் தேதி காலை பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் ஆபத்தாரணபுரம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள தேநீா் கடையில் தேநீா் அருந்திவிட்டு சாலையோரம் நின்றிருந்தாா்.

அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத பைக் மோதியது.

இந்த விபத்தில் முதியவா் முருகேசன் பலத்த காயம் அடைந்தாா். தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வடலூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.