22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

வாகனம் மோதி காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயம் அடைந்த முதியவா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 5:15 am IST

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயம் அடைந்த முதியவா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

வடலூா் அடுத்துள்ள தென்குத்து கிராமத்தில் வசித்து வந்தவா் முருகேசன்(80). இவா், கடந்த 6-ஆம் தேதி காலை பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் ஆபத்தாரணபுரம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள தேநீா் கடையில் தேநீா் அருந்திவிட்டு சாலையோரம் நின்றிருந்தாா்.

அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத பைக் மோதியது.

இந்த விபத்தில் முதியவா் முருகேசன் பலத்த காயம் அடைந்தாா். தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வடலூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.