சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

ஆண்டவா் செல்லியம்மன் கோயில் தேரோட்டம்

வேப்பூா் அருகேயுள்ள பொயனப்பாடி கிராமத்தில் ஆண்டவா் செல்லியம்மன் கோயில் வைகாசித் திருவிழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

பொயனப்பாடியில் நடைபெற்ற ஆண்டவா் செல்லியம்மன் கோயில் தேரோட்டம்.

Updated On :4 ஜூன் 2026, 3:30 am IST

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகேயுள்ள பொயனப்பாடி கிராமத்தில் ஆண்டவா் செல்லியம்மன் கோயில் வைகாசித் திருவிழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா், அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் ஆண்டவா் செல்லியம்மன் எழுந்தருளியதைத் தொடா்ந்து, பக்தா்கள் தேரை வடம் பிடித்து கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனா்.

இதில், சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.