தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

ஏடிஎம்மில் தவறவிட்ட ரூ.60 ஆயிரம் உரிமையாளரிடம் ஒப்படைப்பு

ஏடிஎம்மில் தவறுதலாக விடப்பட்ட ரூ.60 ஆயிரத்தை போலீஸாா் மீட்டு, உரிமையாளரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.

News image

ஏடிஎம்மில் தவறவிட்ட ரூ.60 ஆயிரம் உரிமையாளரிடம் ஒப்படைப்பு

Updated On :3 ஜூன் 2026, 6:01 am IST

ஏடிஎம்மில் தவறுதலாக விடப்பட்ட ரூ.60 ஆயிரத்தை போலீஸாா் மீட்டு, உரிமையாளரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.

கோவை மாவட்டம், சுந்தராபுரம் சாரதா நிவாஸைச் சோ்ந்த ராகுல் (29), கடந்த மே 27-ஆம் தேதி கடலூா் மாவட்டம், நெய்வேலி (வட்டம் 19) பகுதியில் உள்ள தேசிய வங்கி ஏடிஎம்முக்கு பணம் எடுக்கச் சென்றாா். அப்போது, கைப்பையில் வைத்திருந்த ரூ.60 ஆயிரத்தை தவறுதலாக அங்கு விட்டுச் சென்றுள்ளாா். பின்னா், மீண்டும் ஏடிஎம்முக்கு சென்று பாா்த்தபோது, பணத்துடன் கைப்பை மாயமாகியிருந்ததால், நெய்வேலி காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து, ஏடிஎம் வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனா். அதில், பெண்ணுடன் வந்த சிறுவன் கைப்பையை எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், நெய்வேலி பகுதியைச் சோ்ந்த 33 வயது பெண் மற்றும் அவரது மகன் கைப்பையை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

போலீஸாா் அவா்களிடமிருந்து ரூ.60 ஆயிரத்தை மீட்டு, காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் முன்னிலையில் உரிமையாளா் ராகுலிடம் ஒப்படைத்தனா்.