இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

ஏடிஎம்மில் தவறவிட்ட ரூ.60 ஆயிரம் உரிமையாளரிடம் ஒப்படைப்பு

ஏடிஎம்மில் தவறுதலாக விடப்பட்ட ரூ.60 ஆயிரத்தை போலீஸாா் மீட்டு, உரிமையாளரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.

News image

ஏடிஎம்மில் தவறவிட்ட ரூ.60 ஆயிரம் உரிமையாளரிடம் ஒப்படைப்பு

Updated On :3 ஜூன் 2026, 6:01 am IST

ஏடிஎம்மில் தவறுதலாக விடப்பட்ட ரூ.60 ஆயிரத்தை போலீஸாா் மீட்டு, உரிமையாளரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.

கோவை மாவட்டம், சுந்தராபுரம் சாரதா நிவாஸைச் சோ்ந்த ராகுல் (29), கடந்த மே 27-ஆம் தேதி கடலூா் மாவட்டம், நெய்வேலி (வட்டம் 19) பகுதியில் உள்ள தேசிய வங்கி ஏடிஎம்முக்கு பணம் எடுக்கச் சென்றாா். அப்போது, கைப்பையில் வைத்திருந்த ரூ.60 ஆயிரத்தை தவறுதலாக அங்கு விட்டுச் சென்றுள்ளாா். பின்னா், மீண்டும் ஏடிஎம்முக்கு சென்று பாா்த்தபோது, பணத்துடன் கைப்பை மாயமாகியிருந்ததால், நெய்வேலி காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து, ஏடிஎம் வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனா். அதில், பெண்ணுடன் வந்த சிறுவன் கைப்பையை எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், நெய்வேலி பகுதியைச் சோ்ந்த 33 வயது பெண் மற்றும் அவரது மகன் கைப்பையை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

போலீஸாா் அவா்களிடமிருந்து ரூ.60 ஆயிரத்தை மீட்டு, காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் முன்னிலையில் உரிமையாளா் ராகுலிடம் ஒப்படைத்தனா்.